சுவாமியே சரணம் ஐயப்பா என முழங்க கும்பாபிஷேகம் விழா கோலாகலம்..

திருச்செங்கோடு அருள்மிகு ஐயப்பன் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கோர் பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என முழங்க விழா கோலாகலம்..

நாமக்கல்: திருச்செங்கோடு அருள்மிகு ஐயப்பன் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கோர் பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என முழங்க விழா கோலாகலம்..

https://youtu.be/945BjmJf-bM

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரத்தில் பரமத்தி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாதம் 8 ஆம் நாள் இன்று கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.. தொடர்ந்து,ஶ்ரீ கண்ணிமூல கணபதி, மஞ்சமாதா,கடுத்தசாமி,கருப்பசாமி, கருப்பாயி, நாகராஜா சுவாமிகளுக்கு புனராவர்த்தன ஜிர்ணோதாரன அஷ்டபந்தன விழா நடைபெற்றது.. விழாவானது, சபரிமலை பிரதான தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு ராஜீவரு மற்றும் இளைய தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் ஐயப்ப சுவாமிக்கு கும்பாபிஷேக நடைபெற்றது. மேலும், கலசத் திங்கள்,உஷபூஜை, கலசாபிஷேகம் நடைபெற்று கலசங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாதாரணை காண்பிக்கப்பட்டு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது.. அப்போது,கோவிலில் ஒன்று கூடி இருந்த பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என முழங்க பிரதான தந்திரி ராஜீவரு,கண்டரரு அவர்களால் கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது... தொடர்ந்து ஆயிரக்கணக்கோர் பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான வழங்கப்பட்டது