சரக்கு ஓட்டுங்கப்பா... நாமக்கல் போலீசார் கொடுத்த ரகசிய உத்தரவு?

சரக்கு விற்பனை நடத்த வேண்டாம் என சொல்லிவிட்டு மாமுல் மட்டும் கட்ட வேண்டும் என காவல்துறை கட்டாயப்படுத்துவதாக வேதனை

சரக்கு ஓட்டுங்கப்பா... நாமக்கல் போலீசார் கொடுத்த ரகசிய உத்தரவு.சரக்கு ஒட்டாம எப்படியா மாமூல் தரது...

வைரலாகும் காணொளி நேற்று(2-10-23) காந்தி ஜெயந்தி-யை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் விடுமுறை விடப்பட்ட நிலையில் சந்து கடைகள் என்ற பெயரில் சட்டவிரோதமாக தமிழகத்தில் மது விற்பனை களை கட்டிய வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல்துறையினர் சட்டவிரோத மது கடைகள் நடத்தும் திமுக பிரமுகர்களுக்கு "சரக்க ஓட்டுங்கப்பா என ரகசிய உத்தரவு கொடுத்ததாக வெளியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...

சென்னையில் தமிழக முதல்வர் முன்னிலையில் தமிழக முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் மாநாடு நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் சட்டவிரவாத மதுக்கடைகள் மூன்று நாட்களுக்கு இயங்க கூடாது என நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா அவர்கள் சட்டவிரோத மதுக்கடைகளுக்கு எதிரான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் காந்தி ஜெயந்தி அன்று நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரே சரக்கை ஓட்ட சொன்ன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் எஸ் பி சென்னை முதல்வரின் மாநாட்டு சென்றதை தொடர்ந்து நேற்று காந்தி ஜெயந்தி அன்று சட்டவிரோத மதுக்கடைகளை திறக்க அந்தந்த பகுதி காவல் துறையினர் ரகசிய உத்தரவு கொடுத்தது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த காணொளியில் பேசும் சட்டவிரோதம் மதுக்கடை நடத்தும் திமுக பிரமுகர் புலம்புவதை பார்த்தால் அவர் சட்டைப்பையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் "ஏயா என்னை இப்படி கொல்றீங்க" என கேட்பது போல் உள்ளது ...

சட்டவிரோத மதுக்கடை நடத்தும் திமுக பிரமுகர் கூறுகையில் சரக்கு விற்பனை நடத்த வேண்டாம் என சொல்லிவிட்டு மாமுல் மட்டும் கட்ட வேண்டும் என காவல்துறை கட்டாயப்படுத்துவதாக வேதனையோடு தெரிவிக்கிறார். குறிப்பாக புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முதலில் சரக்கு ஓட்டக்கூடாது என சொல்லிவிட்டு பிறகு கண்டும் காணாமல் ஓட்டுங்கள் என போலீசார் காதை கடித்ததால் கடுப்பான திமுக பிரமுகர் சரக்கே எடுக்காமல் எப்படி ஓட்டுவது எப்படி நான் சரக்கு விற்ப்பது மாமூல் தருவது என புலம்பும் காணொளி வெளியாகி உள்ளது...

இதேபோல் நாமக்கல் மாவட்டம் எல்லைக்குட்பட்ட வேல கவுண்டம்பட்டி, எலச்சிபாளையம், ராசிபுரம்,திருச்செங்கோடு பேளுக்குறிச்சி மங்களபுரம்,ஆயில்பட்டி வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளிலும் போலீசார் ரகசிய உத்தரவின் பேரில் சட்டவிரோத மது விற்பனை வெகு ஜோராக நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கணக்கிற்காக இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக சிலரை பிடித்து வழக்குப் பதிந்துள்ளதாக கூறப்படுத்து காந்தி ஜெயந்தி என்று கூட சட்டவிரோத மதுக்கடைகளில் இருந்து வரும் மாமூலை பெறுவதற்கு நாமக்கல் போலீசார் ரகசிய உத்தரவு கொடுத்த விவகாரத்தில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.