மீண்டும் சர்ச்சையாகும் டாஸ்மாக் 10 ரூபாய்

ஒரு கடைக்கு மாதம் சுமார் 1 கோடி கல்லாக்கட்டுகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

மீண்டும் சர்ச்சையாகும் டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதல் வசூல்...

ஒரு கடைக்கு மாதம் சுமார் 1 கோடி கல்லாக்கட்டுகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ராசிபுரம் பகுதிகளில் செயல்படும் டாஸ்மார்க் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் குடிமகன்களிடம் 10 ரூபாய் கட்டாய வசூல் செய்யும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சுமார் 6 முதல் 8 அரசு டாஸ்மார்க் கடைகள் இயங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மதுபாட்டில்கள் வாங்கினால் கூடுதல் பத்து ரூபாய் கட்டாய வசூல் செய்து வருவதாக குடிமகன்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கடந்த சில நாட்களாகவே ஊழியர்களுக்கும் குடிமகன்களுக்கும் தொடர் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது...

குறிப்பாக ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மதுபான கடையில் குடிமகன் ஒருவர் மது பாட்டிலை வாங்கி எதற்காக கூடுதல் பத்து ரூபாய் எடுக்கின்றனர் கேட்ட கேள்விக்கு கடந்த பத்து ஆண்டுகளாக யாரும் இதுவரை என்னிடம் திருப்பிப் பத்து ரூபாய் கேட்டது இல்லை நீ தான் கேட்கிறாய் என குடிமகனை மிரட்டும் தூணில் ஊழியர் பேசிய காணொளியை தற்போது வைரல் ஆகி வருகிறது...

குறிப்பிட்ட அந்த மதுபான கடையில் ஒரு நாளைக்கு 2500 பாட்டில்கள் விற்கும் நிலையில் ஒரு நாள் கூடுதலாக வசூல் செய்யும் தொகை 25000 என்றால் மாதத்திற்க்கு 75,00,000 லட்சம் எனவும் ஒரு வருடத்திற்கு 90 லட்சம் என்றால் டாஸ்மாக் ஊழியர் கூறியது போல் கடந்த 10 ஆண்டுகளில் 90 கோடி ரூபாய் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணம் எங்கு சென்றது என்பது தான் கேள்வி?

இதேபோல் ராசிபுரம் அடுத்த முத்து காளிப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் எதற்கு பத்து ரூபாய் கூடுதல் வாங்குகிறீர்கள் என குடிமகன் கேட்டபோது நாங்கள் என்ன செய்வது எல்லாம் டிஜிட்டல் ஆகட்டும் நாங்கள் கேட்க மாட்டோம் அரசு எந்த சலுகைகளும் வழங்கவில்லை எனவே நாங்கள் இதை வைத்து தான் கட்டிடத்திற்கு வாடகை கரண்ட் பில் ஏற்றுக் கூலி எனக்கு கூலி என தர வேண்டும் என நைசாக பதில் பேசிய காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...

கூடுதல் பணம் வசூலித்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படும் என மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தும் டாஸ்மார்க் ஊழியர்கள் மீண்டும் அதிரடியாக பத்து ரூபாய் வசூலில் ஈடுபட்டு உள்ளது குடிமகன் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...