நாமக்கல்:சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த பரிதாபம். தொடரும் சவர்மா உயிரிழப்புகள்...உணவு பாதுகாப்பு துறையின் அலட்சியமா?
ஒவ்வொரு முறையும் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின் சம்பந்தப்பட்ட உணவுகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைப்பது வாடிக்கையாகி விட்டது. உயிரிழந்த பின்பு நடவடிக்கை எடுப்பதால் என்ன பிரயோஜனம் என்பதுதான் கேள்விக்குறி?

நாமக்கல்:சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த பரிதாபம்.தொடரும் சவர்மா உயிரிழப்புகள்...உணவு பாதுகாப்பு துறையின் அலட்சியமா?
உணவு பாதுகாப்புத் துறை உணவகங்களை முறையாக கண்காணிக்காததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு.
ஒவ்வொரு முறையும் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின் சம்பந்தப்பட்ட உணவுகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைப்பது வாடிக்கையாகி விட்டது. உயிரிழந்த பின்பு நடவடிக்கை எடுப்பதால் என்ன பிரயோஜனம் என்பதுதான் கேள்விக்குறி?
உணவு பாதுகாப்பு துறை முறையாக அனைத்து உணவகங்கள் பேக்கரிகளை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போல் உயிரிழுப்புகளை தடுக்க முடியும்... தமிழக அரசு உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மாற்றி நேர்மையான அதிகாரிகளை நியமித்து இனியும் இது போல் உயிரிழப்புகள் தொடராமல் பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர் பகுதியைச் கலையரசி தன்னுடைய குடும்பத்துடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிழந்தார். மேலும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதே சவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது.
இதை தொடர்ந்து நேற்று நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தன்னுடைய பிறந்தநாளுக்கு சவர்மா பார்சல் வாங்கி பிறந்த நாள் பார்ட்டி வைத்ததில் மருத்துவ கல்லூரியை சேர்ந்த 13 மாணவ, மாணவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சென்ற மாவட்ட ஆட்சியர் எஸ். உமா தனியார் உணவகத்தில் உள்ள இறைச்சிகளை சோதித்து இவைகள் கெட்டுப் போனது என ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.