சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளிக்கதிர்:பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு

ராசிபுரம் : ராசிபுரம் அருகே சிவலிங்கம் மேல் வருடத்திற்கு ஒரு முறை சூரிய கதிர் விழும் அற்புத நிகழ்வு: சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடலை பாடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு.

ராசிபுரம்:ராசிபுரம் அருகே சிவலிங்கம் மேல் வருடத்திற்கு ஒரு முறை சூரிய கதிர் விழும் அற்புத நிகழ்வு:

சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடலை பாடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அண்ணாமலை பட்டியில் அமைந்துள்ள தென் திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்த நிகழ்வில் சங்குநாதம் முழங்கி சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவ பக்தர்கள் வழிபாடு நடத்தினர் . சிவலிங்கம் மேல் வருடத்திற்கு ஒரு முறை சூரிய கதிர் விழும் அதிசயம் நிகழ்வு இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது.