மாதா பிதா வழிபாட்டு திருவிழா

கடந்த 300 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இவ்விழாவில் கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு படையல் வைத்து வழிபட்டு வருகின்றனர்

மாதா பிதா வழிபாட்டு திருவிழா | RASIPURAM KLLARAI CHRISTIAN FESTIVEL

கடந்த 300 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இவ்விழாவில் கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு படையல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பெரும்பாகவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 300 வருடங்களுக்கு மேல் பொங்கல் முடிந்து கரிநாள் அன்று மாதா பிதா வழிபாட்டுத் திருவிழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

கிறிஸ்தவ பெருமக்கள் தங்களின் மூதாதையர்களின் கல்லறைகளுக்கு வந்து மாலை அணிவித்து தேங்காய், பழம் உடைத்து, படையல் வைத்து வழிபடுவதுடன் அன்னதானமும் வழங்கப்படுவது இங்கு சிறப்பு...

இந்நிகழ்ச்சியில் சுமார் அப்பகுதியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை வழிபட்டு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.