பதக்கங்கள் பெற்ற காவலர்களுக்கு பாராட்டு
மாநில-அளவிலான-63-வது-காவல்துறை-விளையாட்டு-போட்டி

மாநில அளவிலான 63வது காவல்துறை விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற காவலர்களுக்கு பாராட்டு.
தமிழக காவல்துறையின் சார்பில் 63-வது மாநில அளவில் நடத்தப்பட்ட காவல்துறை ஆளிநர்களுக்கான Wrestling, Arm Wrestling, Bodybuilding, Boxing, Kabbadi, Power Lifting, Weightlifting போன்ற விளையாட்டு போட்டிகள் சென்னையில் 07.09.2023-ம் தேதி முதல் 09.09.2023-ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில் கலந்து கொண்ட நாமகிரிப்பேட்டை காவல் நிலைய பெண் த.கா.761 திருமதி.அமுதா என்பவர் வலுதூக்குதலில் தங்கப்பதங்கமும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும், இராசிபுரம் போக்குவரத்து காவல் நிலைய பெண் த.கா 1249 திருமதி.அருள்மொழி என்பவர் பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கமும், திருச்செங்கோடு நகர காவல் நிலைய மு.நி.கா.1481 திரு.ராதாகிருஷ்ணன் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கமும், பேளுக்குறிச்சி காவல் நிலைய மு.நி.கா.1536 திரு.பாலமுருகன் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கமும், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய மு.நி.கா.1591 திரு.தினேஷ்குமார் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்தனர்.
மேலும், தேசிய அளவில் நடைபெறும் காவல்துறையினருக்கான விளையாட்டுப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். பதக்கங்கள் வென்ற காவல் ஆளிநர்கள் இன்று 14.09.2023-ம் தேதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப. அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.