பற்றி எரிந்த மின்கம்பம் அலறி அடித்து ஓடிய மக்கள்
ராசிபுரம் கடைவீதியில் பற்றி எரிந்த மின் கம்பத்தால் பதற்றம்
இராசிபுரம்: ராசிபுரம் பூக்கடைவீதி பகுதியில் மின் கம்பத்தில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மின்சாரத் துறையினரால் அசம்பாவிதம் தவிர்ப்பு... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பூக்கடைவீதி பகுதியில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக மின்கம்பிகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
பூக்கடைவீதி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்கு வெயில் காரணமாக ஆண்டுதோறும் கீற்றுப் பந்தல் அமைக்கப்பட்டுவது வழக்கம் இந்த கீற்றுப்பந்தலின் அருகில் உள்ள கம்பத்தில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின் கம்பிகளில் பற்றி எரிந்த தீப்பொறி பந்தல் மீது விழுந்ததில், கீற்றுப்பந்தலும் பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தண்ணீரை அடித்து தீயை அணைக்க முற்பட்டனர். மேலும், தீயணைப்புத்துறை, மின்சாரத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்த அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேரத்திலேயே தீயை அணைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள், தீயணைப்புதுறையினர் மற்றும் மின்சாரத் துறையினரின் துரித நடவடிக்கையால் மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.