ஜீ தமிழ் தொடரில் இணைந்த செவ்வந்தி சீரியல் நடிகை!

ஜீ தமிழ் தொடரில் இணைந்த செவ்வந்தி சீரியல் நடிகை!
ஜீதமிழ் டிவி-யின் தவமாய் தவமிருந்து சீரியலில் சந்தியாவுக்கு பதில் மலர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை சிவன்யா.
ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' சீரியல், பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளதோடு, பார்வையாளர்களால் விரும்பப்படும் ஒன்றாகவும் மாறியுள்ளது. இந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தியா விலகிய நிலையில், செவ்வந்தி புகழ் நடிகை சிவன்யா தற்போது தவமாய் தவமிருந்து சீரியலில் அந்தக் கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்த சீரியலில் தனது தோற்றம் குறித்து பேசிய நடிகை சிவன்யா, "மலர் கதாபாத்திரத்தில் நடிப்பதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குனர் பிரதாப் மணி சாருக்கு எனது நன்றி. இந்த சீரியலில் நான் எனது சிறப்பான நடிப்பை வழங்குவேன். தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்கும் பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி" என்றார்.

தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட நடிகை சிவன்யா, திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு செவ்வந்தி சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தார். இது பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

தவமாய் தவமிருந்து சீரியல் ஏப்ரல் 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பசங்க சிவகுமார் மற்றும் அனிதா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மகேஷ் ஜி, தீனு நிரோஷினி, பாண்டி கமல், யாளினி ராஜன், கருணா விலாசினி, பாலா கௌம்ஹர், சங்கீதா பாலன், பிரியா, சுனிதா, சாய் சக்தி, கானா ஹரி, மரியா ஜூலியானா, புவியரசு ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.