சேலம்:தனியார் பள்ளியில் சாலை போடப்பட்டதாக Al - மோசடியா?

காணாமல் போன பள்ளி சாலை | பெருச்சாளி அரித்து விட்டதா?

பெருச்சாளியால் காணாமல் போன பள்ளி சாலை...

சேலம் தொளசம்பட்டியில் தனியார் பள்ளியில் சாலை போடப்பட்டதாக Al - மோசடியா?

பள்ளி இணையத்தில் படங்களாக கொடுக்கப்பட்டுள்ள சாலைகளை பெருச்சாளி அறிந்து விட்டதா என கேட்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்?

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தொளசம்பட்டியில் செயல்பட்டு வரும் சிவகாமி அம்மாள் சுப்பிரமணியம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி கடந்த 1999 ஆம் ஆண்டு ஆரம்பித்து, இன்றுவரை தொடக்கப் பள்ளியாகவே செயல்பட்டு வருகிறது...

பல்வேறு முறைகேடுகளால் உயர்நீதிமன்றம் வரை பல்வேறு புகார்களில் சிக்கி வழக்கு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்பள்ளிக்கு தார் சாலை வசதி இல்லாததால் குடிநீர் வடிகால் வாரிய பாதையை கடந்த 12 ஆண்டுகளாக இப்பள்ளி நிர்வாகம் தங்களுடைய பள்ளி பேருந்துகள் சென்று வர முறைகேடாக பாதையை பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தெரியவந்ததை அடுத்து பள்ளி பேருந்துகள் அந்த வழியாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான பட்டா எண் 731 ல் உள்ள தனியார் நிலத்தில் பொது தார் சாலை இருப்பதாக போலியான புகைப்படத்தை தயார்' செய்து,அதை நீதிமன்றத்தில் கொடுத்தாக கூறப்படுகிறது.

இப்பள்ளிக்கு தார் சாலை இருப்பதாக நீதிமன்றத்தில் கொடுத்த புகைப்படங்கள் போலியானது என்பது தற்போது நேரடி காட்சின் மூலம் உண்மையை காட்டிக் கொடுத்து வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு பிறகு சட்டத்துக்கு புறம்பாக தார் சாலை போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கருத்தாகும். உயர்நீதிமன்றம் வரை இப்பள்ளியின் முறைகேடுகள் அம்பலமாகி விட்டதால், இனியாவது இப்பள்ளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்...