"விண்ணை முட்டிய அண்ணாமலைக்கு அரோகரா" என்ற கோஷம்"
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அண்ணாமலை பட்டியில் அருள்தரும் உண்ணாமலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா
ராசிபுரம் : ராசிபுரம் அருகே தென்திருஅண்ணாமலை பட்டியில் திருக்கார்த்திகை நாளில் "விண்ணை முட்டிய அண்ணாமலைக்கு அரோகரா" என்ற கோஷத்துடன் கார்த்திகை தீபம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அண்ணாமலை பட்டியில் அருள்தரும் உண்ணாமலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது..
நிகழ்வில் தீப பெருவிழாவில் அண்ணாமலையாருக்கு கொடியேற்றத்துடன் நிகழ்வு தொடங்கி பரணி தீபம்,அபிஷேகம் மற்றும் உச்சகால வழிபாடு என பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து மாலையில் மகாதீப தரிசனம் நடைபெற்றது.. தென்திரு அண்ணாமலையின் பெயரும் பொன் சொரிந்த மலை என்று அழைப்பர். இம்மலையின் கிழக்கில் அண்ணாமலையாரின் அழகு முகமாகவும், தென்கிழக்கில் விநாயகர் முகமாகும், மேற்கில் ஆஞ்சநேயர் முகமாகவும், வடக்கில் உண்ணாமலை அம்மையாகவும், தெய்வமலையாக காட்சி தருகிறார்..
மாலையில் தென்மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையார் அரோகரா" என விண்ணை முட்டும் அளவுக்கு கோஷத்துடன் தீபத்தை வணங்கினர்...
மேலும், விநாயகர் வள்ளி தெய்வானை முருகப்பெருமான், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மை, சண்டிகேச நாயனார், அர்த்தநாரீஸ்வரர் என ஐந்து உர்வச மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்து மேளதாளம்,நாதஸ்வரம் முழங்க பக்தர்கள் திருநடனம் ஆடி திருவீதி உலா வரும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது..
நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது...