ஆதாரத்துடன் சிக்கிய பூஜா.. ஷக்தி எடுத்த சபதம் - மீனாட்சி பொண்ணுங்க

அதனை தொடர்ந்து ரங்கநாயகி சகுந்தலாவை எச்சரித்து சரண்யாவின் வயிற்றில் வளர்வது அசோக்கின் குழந்தை தான் என்று கூறி ,சரண்யாவை அனுப்ப மறுக்கிறாள். ஆனால் சரண்யா அசோக்குடன் சென்று விடுகிறாள். அதன் பிறகு சக்தி பூஜாவை சந்தித்து உனக்கு கல்யாணம் செய்து வைத்து இந்த வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சபதம் போடுகிறாள்.
இதனை தொடர்ந்து சகுந்தலாவின் வீட்டிற்கு சென்ற வெற்றி சகுந்தலாவை குச்சியால் அடித்து எச்சரிக்கிறான். அடுத்ததாக கோவிலில் கொடியேற்று விழா நடத்துகிறார்கள். முதல் மரியாதை பரிவட்டம் நீதிமணி மனைவி மீனாட்சிக்கு தான் தர வேண்டும் என்று ஊர்க்காரர்கள் பேச ,அப்போது அங்கே வந்த புஷ்பா நானும் நீதிமணி மனைவி தான் என்று என்று சொல்லி எனக்குத் தான் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று பிரச்சனை செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.