இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் யூரியா கிடைக்கிறது- பிரதமர் மோடி

இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் யூரியா கிடைக்கிறது- பிரதமர் மோடி
ந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் யூரியா கிடைப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் 17ஆவது இந்திய கூட்டுறவு காங்கிரஸின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார் . அப்போது பேசிய பிரதமர், ஆண்டுதோறும் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு ஆறரை லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு வருவதாக கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளர்ப்புத் தொழில் இருமடங்காக வளர்ந்துள்ளதாக கூறிய அவர், இந்திய பால் பொருட்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளை சாராமல் இருக்க டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறினார். ஆண்டுதோறும் ஏதோ ஒரு வகையில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு தருகிறது என்றார்.
கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற உதவி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து 70ஆயிரம் கோடி ரூபாய்க்கு எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.