ரயில்வே துறையில் இத்தனை லட்சம் காலிபணியிடங்களா...?

ரயில்வே துறையில் இத்தனை லட்சம் காலிபணியிடங்களா...?
யில்வே துறையில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சகம், இந்தாண்டு ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி, ரயில்வே துறையில் குரூப் சி பிரிவில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 580 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதே போன்று, ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 924 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக ரயில்வே துறையில், சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக துறை சார்ந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.